தடுப்பூசி அட்டை..
எதிர்வரும் காலங்களில் பொது இடங்களுக்குச் செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்லும் போது,
கோவிட் தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கோவிட் தடுப்பு குழுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
-தமிழ்வின்-