கொக்குவெளி பகுதியில்..
வவுனியா கொக்குவெளி பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் மாயமாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிராம மக்களின் தொடர்சியான முயற்சியால் கிணற்று நீர் வெளியில் இறைக்கப்பட்டு நேற்று (20) இரவு 11.30 மணியளவில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் அகிலேஸ்வரன் தனுசன் என்ற 16 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மாமடு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.