பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள் : நெகிழ்ச்சி சம்பவம்!!

926

இந்தியாவில்..

இந்தியாவில் கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள முன்வருவதில்லை, காரணம் சமூகம் என்ன சொல்லிவிடுமோ என்ற அச்சத்தில் தான்.

ஆனால் தற்போது காலங்கள் மாறிவிட, பெற்ற பிள்ளைகளே தாய்க்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. சமீபத்தில் கூட மகள், தன்னுடைய தாய்க்காக வரன் தேடிய நிகழ்வு நடந்தது.

இந்நிலையில் தற்போது தாய்க்கு மறுமணம் செய்து வைத்த நிகழ்வை மகள் டுவிட்டரில் வெளியிட வைரலானது. @alphaw1fe என்ற ட்விட்டர் யூசர், சமீபத்தில் திருமணத்தின் சில ஸ்னாப்ஷாட்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவரது தாயார், மணமகள் ஆகவிருப்பதையும், மங்களகரமான நாளுக்காக தனது தாய்க்கு மெஹந்தி நிகழ்ச்சி நடந்து வருவதையும் பகிர்ந்திருந்தார். மேலும் அதில், தன் தாய் திருமணம் செய்து கொள்வதை தன்னால் நம்ப முடியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த டுவிட் வைரலாக வாழ்த்துகள் குவிந்தனு, தொடர்ந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயாருக்கு ஏற்பாடு செய்யப்பட இருந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லி விலகி விட்டதாக ஒரு நெட்டிசன் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ளார்.

ஏனெனில் நானும் எனது 16 வயது சகோதரனும் எங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் துணை வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் இப்போது? எங்கள் வாழ்க்கையில் தந்தையாக ஒருவரை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

மகளின் அடுத்தடுத்த பதிவு மிகவும் பிரபலமானதால், அவர் தனது தாயின் மோதிரம் மாற்று விழாவின் மகிழ்ச்சியான தருணங்களின் சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.