வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை – 2021!!

1134

தொழிற்சந்தை..

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (23.12) காலை தொடக்கம் மதியம் வரை மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்சந்தை இடம்பெற்றது.



உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின் அனுசரனையில் இடம்பெற்ற தொழிற்சந்தையில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர தலைமை வகித்திருந்தார்.

இதன் போது தொழிற்சாலைகள், உணவகங்கள், வர்த்தக நிலையங்கள், பேக்கரி நிலையங்கள் என 18க்கு மேற்பட்ட தொழில் வழங்குனர்கள் பங்கு வகித்திருந்ததுடன் தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கு பற்றியிருந்தனர்.

தொழிற்சந்தை நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியதுடன் பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் பெ.கிருஷ்ணாந்தி தொழிற்சந்தை தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.