விசேட கொடுப்பனவு..
அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி,
4000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இக் கொடுப்பனவு விசேட கொடுப்பனவாக அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.