முல்லைத்தீவில் மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு : ஆசிரியர் கைது!!

1569

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (24.12) இடம்பெற்றுள்ளது. பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவினர்க்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் விசாரணைகளின் பின்னர் இன்று (25.12) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 04.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து குறித்த சந்தேக நபர் வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்படவுள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் தற்போது பெண்கள் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அது தொடர்பில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிள்ளைகளின் பாதுகாவலர்கள், சிறுவர்கள் தொடர்பில் சரியான அக்கறையுடன் செயற்பட வேண்டியது கட்டாயமாகும். பல வன்முறை சம்பவங்கள் வெளிப்படுத்த முடியாமல் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.