யாழில் திருமணமாகி சில மாதங்களில் உயிரை மாய்ந்த பெண்!!

1643

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி உயிரை மாய்த்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாய் தெற்கு கொடிகாமம் பகுதியை சேர்ந்த 27 வயதான பெண்ணே விபரீத முடிவை எடுத்துள்ளார்.

திருமணமாகி 11 மாதங்களே ஆன நிலையில் தனது சாவிற்கு கணவனோ, வேறு யாருமோ காரணம் இல்லை, தலைவலி காரணமாகவே இம்முடிவை எடுத்தேன் எனக் கடிதம் எழுதி வைத்து விட்டு மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டி உயிரை மாய்த்துள்ளார்.


உயிரிழந்த பெண்ணின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.