பால் மாவை அடுத்து திரவப் பாலுக்கும் தட்டுப்பாடு

995

பால் மாவை அடுத்து

நாட்டில் பால் மாவுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், தற்போது திரவ பாலுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் திரவ பாலை பொதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்கு அரசாங்கம் 5% வரி விதித்துள்ளதால், உள்ளூர் திரவ பால் தொழில்துறை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.

பால் மா இறக்குமதி செய்யப்படாத சூழலில் உள்ளூர் திரவப் பாலுக்கு வரி விதிக்கப்பட்டமை தொழில்துறையையும் அதன் பொறிமுறைகளையும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திரவப் பாலின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை என தேசிய கால்நடை சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,டொலர் நெருக்கடி காரணமாக உள்ளூராட்சி பால் நிறுவனங்கள் பயன்படுத்திய பொதிகளும் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதோடு அவற்றில் சில அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.