
பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30ம் திகதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து வைத்தியர்கள் சிகிச்சை அளித்தார்கள். 6 நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு இருந்தார்.
மனோரமாவின் உடல்நிலை சீரானதும், சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகும் அவர் 2 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று அங்கிருந்து வீடு திரும்பினார்.





