உறவினருடன் சென்ற சிறுவனுக்கு திடீரென அரங்கேறிய பயங்கரம்!!

1090

கோயம்புத்தூர்…

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனியில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார்.

இந்த தம்பதிகளுக்கு சரத் என்ற மகனும், சாதனா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை புதூர் பகுதியில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த உறவினர் ஒருவர்,

தடுப்பூசி போடுவதற்காக வீட்டில் இருக்கும் ஆதார் கார்டை வாங்கி வருமாறு சரத்திடம் செல்போனில் கூறியுள்ளார். இதனால் உறவினரான குருசாமி என்பவருடன் சரத் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இவர்கள் முள்ளுப்பாடி ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது.

இதனால் படுகாயமடைந்த சரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.