நாளை முதல் தினமும் இலங்கை முழுவதும் மின்தடை : வழங்கப்பட்டது அனுமதி!!

3456

மின்தடை..

நாளை முதல் நாளாந்தம் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.