வவுனியாவில் நாளை பல இடங்களில் மின்தடை : விபரம் உள்ளே!!

4230

மின்தடை..

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (12.01) ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.

வவுனியா பிரதேசத்தில் அரசன் அரிசி ஆலை, வைரவப் புளியங்குளம், ஆதி விநாயகர் கோவிலடி, றம்பைக்குளம், மகாபகல அளுத்வத்த, புபுதுகம, குருக்களூர், மன்னார் வீதி, முகத்தான்குளம் 1 ஆவது பண்ணை ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.