பற்றியெறிந்த எரிவாயு அடுப்பு..
வவுனியா குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது திடீரென காஸ் அடுப்பு பற்றி எரிந்துள்ளது
வவுனியா, குடியிருப்பு வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது இன்று (14.01.2022) முற்பகல் திடீரென காஸ் அடுப்பின் கீழ் பகுதி பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து வீட்டார் காஸ் சிலிண்டர் பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.