வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற மாட்டுப் பொங்கல்!!

1543


மாட்டுப் பொங்கல்..



விவாசாயிகளுக்கு கைகொடுக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவித்து வவுனிழயாவிவ் கோமாதா வழிபாடும், மாட்டுப் பொங்கலும் சிறப்பாக இன்று இடம்பெற்றது.



தமிழ் மக்களின் பாராம்பரிய உழவர் திருநாளான தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் கோமாதா வழிபாடும் மாட்டுப் பொங்கலும் இடம்பெறுவது வழமை.




விவசாய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய தமது மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாட்டு பொங்கலும், கோமாதா வழிபாடும் இடம்பெற்று வருகின்றது.


வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் மாட்டுப் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது மாடுகளை குளிக்கவைத்து, மாலை அணிவித்து, வடை மாலை, பொங்கல் என்பவற்றை செய்து மாட்டுக்கு படைத்தும், அதற்கு உணவளித்தும் வழிபாடுகள் இடம்பெற்றது.