வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் அதிரடியாக கைது!!

2364

கைது..

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று (17.01.2022) காலை 8.00 மணியளவில் பல லட்சம் ரூபா பெருமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் பேரூந்தில் போதைப்பொருள் எடுத்துச்செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,

ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சுகுமார் சுகந் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த பேரூந்தினை ஈரப்பெரியகுளம் பகுதியில் மறித்து சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது அதில் பணித்த நபர் ஒருவரின் பயணப்பொதியிலிருந்து 6.5 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியதுடன் சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைப்பற்றிய 6.5 கிராம் ஹெரோயினையும் சந்தேகநபரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

2 கிராமிற்கு மேலதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் குற்றம் உறுதிசெய்யப்படும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடந்த காலங்களில் நீதிமன்றில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.