கொழும்பு துறைமுக நகரை பார்க்க குவியும் மக்கள் : கொரோனா கொத்தணி உருவாகும் நிலை!!

929


துறைமுக நகரை பார்க்க குவியும் மக்கள்..



கொழும்பு துறைமுக நகர சூழலை பார்வையிட அதிகாரிகள் மக்களுக்கு அனுமதியை வழங்கிய பின்னர் சுகாதார ஆலோசனைகள் அல்லது சமூக இடைவெளியை கவனத்தில் கொள்ளாது, அதிகளவிலான மக்கள் நேற்றைய தினம் துறைமுக நகரை பார்வையிட சென்றுள்ளனர்.



இவ்வாறான நிலைமையில், அடுத்த வரும் தினங்களில் துறைமுக நகர கொரோனா கொத்தணி உருவாகும் வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.




இலங்கையில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு பெருமளவில் பரவும் ஆபத்து இருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளார். ஒமிக்ரோன் தொற்றிய 160க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அண்மையில் கண்டறியப்பட்டனர்.