அமெரிக்காவில் பாடசாலை மாணவனின் வெறியாட்டத்தில் 22 பேர் படுகாயம்!!

327

USA

அமெரிக்கப் பாடசாலையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை கத்தியால் குத்தியதில், 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

பிட்ஸ்பர்க் அருகே உள்ள முர்ரிஸ்வில்லி என்னுமிடத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை மாணவர் ஒருவர் கத்தியுடன் வந்து திடீர் தாக்குதல் நடத்தினார். கண்ணில் தென்பட்ட மாணவர்கள் அனைவரையும் அவர் கத்தியால் குத்தினார். இதில் 20 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும் ஒரு நபரும் கத்திக்குத்தில் காயமடைந்தார். அவர் யாரெனத் தெரியவில்லை.

இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பாடசாலையிலிருந்து மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்த தகவலையடுத்து உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீஸார், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மாணவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். கத்திக்குத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து பிடிபட்ட மாணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.