சிவப்பு எச்சரிக்கை..
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார பிரிவினரினால் டெங்கு பரவும் இடங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் டெங்கு பரவும் அபாயம் காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நோட்டிஸ்களும் வழங்கப்பட்டன.
இறம்பைக்குளம் பிரிவுபொதுச்சுகாதார பரிசோதகர் தலமையில் நகரின் சகாயாமாதாபுரம் , சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளில் இன்று (21.01.2022) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2.00 மணி வரையிலான காலப்பகுதியில் டெங்கு பரவும் இடங்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன் போது அப்பகுதியிலுள்ள வீடுகள் , வர்த்தக நிலையங்களின் திண்மக்கழிவுகள் நகரசபை வாகனத்தில் ஏற்றப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகள் பெருகும் நிலையில் காணப்பட்ட இடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.
இவ் நடவடிக்கை பொலிஸ் உத்தியோகத்தர்கள் , சுகாதார ஊழியர்கள் . நகரசபை சுகாதார ஊழியர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.