கிளிநொச்சியில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்து : இருவர் காயம்!!

859

விபத்து..

கிளிநொச்சி இரணைமடு – முருகண்டிக்கு இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் இன்று (21.01) இரவு 8.30 மணியளவில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இரணைமடு பகுதியிலிருந்து ஏ9 வீதியூடாக முருகண்டி பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இரானுவ வாகனம் முருகண்டி பொலிஸ் காவல் நிலையத்தினை அண்மித்த பகுதியில் இராணுவ வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபக்கத்தி்ற்கு சென்று வீதியினை விட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இராணுவ வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்ததுடன் மேலதிக விசாரணைகளை முருகண்டி காவலரண் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.