அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர் இளைஞர் ஒருவர் நேற்றிரவு சிட்னியில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக தமிழ் அகதிகள் சபை தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்த சம்பவம் ஒன்று நேற்று தினம் சிட்னியில் உள்ள ஹோம்புஸ்சில் இடம் பெற்றுள்ளது .
பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா வந்த இலங்கை வட மாகாணம் KKS யாழ்ப்பாணத்தினை சேர்ந்த 30 வயதுடைய தயாளன் ஜனார்த் என்று அழைக்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர் தனக்கு தானே தீ வைத்துள்ளர்.
மேற்படி நபர் பாரிய எரிகாயங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொன்கோர்ட் வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன
நேற்றைய தினம் குடிவரவு திணைக்களத்தால் இவருடைய மனிதாபிமான பாதுகாப்பு விசாவிற்கான விண்ணப்பம் நிரகரிக்கப்படுள்ளதக் அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
இவர் தற்கொலை செய்து கொள்வதற்காக காரணத்தினை கடிதம் எழுதி வைத்திதுவிட்டு தன்னை தான் தீ வைத்துள்ளதாக தெரியவருகின்றது.