விபச்சாரத்திற்கு மறுத்த பெண்ணின் மார்பகத்தை அறுத்து சித்திரவதை செய்த கொடுரம்!!

993

Abuse11இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரை வேலை வாங்கி தருவதாக அலாம், அப்ஷல் என்ற 2 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மும்பைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் இவரை ஏமாற்றி விபச்சார விடுதியில் 30,000 ரூபாவிற்கு விற்றுவிட்டுச் சென்றனர். அங்கு விபச்சார விடுதித் தலைவியாக செயற்பட்ட பெண், குறித்த இளம் பெண்ணை விபச்சாரத்திற்கு வற்புறுத்த அவர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விபச்சார விடுதித் தலைவி மற்றும் சிலரும் சேர்ந்து இந்தப் பெண்ணை சூடு வைத்து சித்ரவதை செய்தனர். பற்களை உடைத்தனர். மேலும் கொடூரமகாச் சென்று மார்பகத்தை அறுத்தனர்.

இந்தத் தகவலை அறிந்த பிவாண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் விபச்சார விடுதித் தலைவியை பிடித்து கைது செய்தனர். சித்ரவதை செய்த மற்ற 2 பெண்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இந்தக் கொடூரத்திற்கு ஆளான பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையிலும் அவர் பிரமை பிடித்தவர் போல் இருந்து வருகிறாராம். இந்தநிலையில் அவரது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.