வவுனியா மாவட்டத்தில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் 3051 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு!!

1447


புலமைப்பரிசில் பரீட்சை..



நாடளாவிய ரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22.01.2022) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.



நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தமிழ்மொழி மூலம் 85 ஆயிரத்து 445 பரீட்சாத்திகளும், சிங்களமொழி மூலம் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 62 பரீட்சாத்திகளுக்கு 496 பரீட்சை மத்திய நிலையங்களில் பரிட்சைகள் நடைபெற்றது




இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றதுடன் 16 பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்ததுடன்,


கடந்த இரு தினங்களாக பரீட்சை மண்டபங்கள் தொற்று நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் பிரயோகப்படுத்தப்பட்டிருந்தன

மேலும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கைச்சுத்தம் , உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்பட்டிருந்தது.