வவுனியாவில் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் வாழ்வின் எழுச்சி விற்பனைச் சந்தை!!(படங்கள்)

377

வவுனியாவில் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பிரதேச செயலக மட்டத்திலான “வாழ்வின் எழுச்சி விற்பனைச் சந்தை-2014” இன்று (10.04) வவுனியா பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்க கூடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றும் நாளையும்(10,11) நடைபெறவுள்ள இச் சந்தையில் பல்வேறு உற்பத்திப் பொருட்களின் விற்பனையும் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வர்த்தக  மற்றும் கைத்தொழில் அமைச்சர் கௌரவ ரிசாட் பதுயுதீன் அவர்கள் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா அரசாங்க அதிபர் திரு.M.K.பந்துல ஹரிச்சந்திர அவர்களும், திரு.T.M.K.B.வீரசிங்க (மாவட்ட பிரதிப் பணிப்பாளர் – சமுர்த்தி) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன், வவுனியா பிரதேச செயலாளர் திரு.கா.உதயராசா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

-வவுனியா செய்தியாளர் பாஸ்கரன் கதீசன் –

 

01234567