சிறுவனை துடிக்க துடிக்க கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த கொடூரம் : பதறவைக்கும் சம்பவம்!!

1964

இந்தியாவில்..

இந்தியாவில் ஒன்றரை சவரன் நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ரிச்சர்ட். இவர் தற்போது வெளிநாட்டில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஜோகன் ரிஷி என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் ரிஷி திடீரென மாயமாகி உள்ளார். சிறுவனை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சகாய சில்ஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிறுவனின் கழுத்தில் நகை இருந்ததால் நகைக்காக யாராவது கடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பக்கத்து வீட்டு பாத்திமா என்ற பெண் மீது சிறுவனின் தாயாருக்கு சந்தேகம் வந்ததால் உறவினர்களோடு பார்த்திமா வீட்டை அடித்து நொறுக்கியுள்ளார்.

அப்போது அவர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்த போது துணியால் வாய் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் அடைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே உறவினர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பொலிஸார் பாத்திமாவை உடனடியாக கைது செய்தனர். சிறுவன் அணிந்திருந்த ஒன்றரை சவரன் நகைகாகத்தான் சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்து வைத்ததாக பாத்திமா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.