வவுனியா சூடுவெந்தபுலவு பிரதான வீதியில் அமைந்திருந்த இராணுவச் சாவடி அகற்றம்!!

1889

இராணுவ சாவடி..

வவுனியா சூடுவெந்தபுலவு பிரதான வீதியில் அல் இக்பால் மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் இராணுவத்தினர் சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இவ் வீதியுடாக சந்தேகத்திற்கிடமாக செல்லும் வாகனங்கள் இராணுவத்தினரினால் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது. நாட்டில் தற்போது நிலவும் சீரான நிலமையினையடுத்து இவ் சோதனைச்சாவடி இராணுவத்தினரினால் அகற்றப்பட்டது.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்டிருந்த செட்டிக்குளம் – மதவாச்சி பிரதான வீதியிலுள்ள ஓர் சோதனை சாவடி உட்பட பல இராணுவ சோதனை சாவடிகளும் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.