காதலை ஏற்க மறுத்த காதலன் வீட்டார் : விபரீத முடிவெடுத்த இளம் பெண்!!

1789

திருநெல்வேலி..

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மேரிபாத்திமா தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியம். இவரது மகள் மரிய கென்ஸ்லின். இவர் நகார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அரவது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் ஆசிரியர் மரிய கென்ஸ்லின் தனது உறவுக்கார இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதலுக்கு அந்த இளைஞனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சில நாட்களாகவே மரிய கென்ஸ்லின் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.