வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வாழ்வின் எழுச்சி சந்தை!!(படங்கள்)

298

வவுனியா மாவட்டத்தில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வாழ்வின் எழுச்சி சந்தை வவனியா வடக்கு புளியங்குளத்தில் நேற்று இடம்பெற்றது.

புளியங்குளம் சமுர்த்தி வங்கிச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச் சந்தையில் உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தியிருந்ததுடன் விவசாய விரிவாக்கல் பிரிவினால் இலவச பயிர்ச் சிகிச்சை முகாமும் இடம்பெற்றது.

புளியங்குளம் சமுர்த்தி வங்கி சங்க வளாகத்தில் இடம்பெற்ற இச் சந்தையை வவுனியா வடக்கு பிரதேச செயலர் திரு.க.பரந்தாமன் மற்றும் வவுனியா மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் திரு.பி.வீரசிங்க ஆகியோர் திறந்து வைத்ததுடன் அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான பொது மக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதன்போது உள்ளுர் உற்பத்தியாளர்கள் நன்மை பெற்றிருந்ததுடன் விவசாயிகள் தமது விவசாய பயிர்களுக்கு ஏற்படும் நோய் தாக்கங்களுக்கான சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தனர்.

P1 P2 P3 P4