வவுனியா மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் : பொலிஸார் குவிப்பு

890

போராட்டம்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்ட செயலகத்தின் வாயிலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதினால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிக்கான அணுகல் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் வவுனியா மாவட்ட செயலத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது . இந் நிகழ்ச்சித்திட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பவனவும் உள்ளடங்கியுள்ளன.

இதனையடுத்து காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் மாவட்ட செயலக வாயிலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் போராட்ட இடத்திற்கு வருகை தந்துள்ளார்.