பெரியதம்பனை வீதி..
வவுனியா பிரமனாளங்குளம் மற்றும் பெரியதம்பனை ஊடான பரப்புக்கடந்தான் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையினால் மக்கள் மாற்று வீதியினை பயன்படுத்துமாறு ஒப்பந்ததாரர்கள் அறிவித்தல் வழங்கியுள்ளனர்.
பெரியதம்பனை மற்றும் மருதங்குழி பகுதியில் வீதிக்கு தார் போடும் பணி நடைபெற இருப்பதால் இன்று 26.01.2022 பிற்பகல் 2.00 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
எனவே இவ்வீதியூடான போக்குவரத்தில் ஈடுபடுவர்கள் மடு பிரதான வீதியினை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.