வவுனியாவில் தாயும் மகளும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது!!

327

A8வவுனியாவில் இரண்டு பெண்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆசிகுளம், தரணிகுளம் பகுதியை சேர்ந்த தாயும், மகளும் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

42 வயதான சசிகரன் தவமலர் என்பரின் வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அந்த பெண்ணையும் அவரது மகளான 16 வயதான சசிகரன் யதுர்சினி என்பவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவன் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகிறார். கைது செய்யப்பட்டுள்ள 16 வயதான யதுர்ஷினி , வவுனியா கோமரசங்குளம் மகா வித்தியாலத்தில் கல்வி கற்று வருவதுடன் டிசம்பர் மாதம் கல்விப் பொதுசாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.