இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

1738

ஒமிக்ரோன்..

இலங்கையில் பதிவாகியுள்ள கோவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு ஒன்றில் இந்த தகவல் வெளியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் சுகாதார அதிகாரிகள் இலங்கை மக்களுக்கு அவதானமாக நடந்துகொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.