அவுஸ்திரேலியாவில் இரண்டு பிள்ளைகளை கொலை செய்து தானும் விபரீத முடிவு எடுத்த இலங்கையர்!!

2039


அவுஸ்திரேலியாவில்..



அவுஸ்திரேலியாவில், 40வயதான இலங்கையர் ஒருவர் தமது உயிரை போக்கிக்கொள்வதற்கு முன்னதாக தமது நான்கு வயது மகளையும் ஆறு வயது மகனையும் கொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது.



இந்த சம்பவம் குறித்து அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த சம்பவத்துக்கான காரணங்கள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.




அவுஸ்திரேலியாவின் பேர்த்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள எஸ்சிங்டன் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆரம்ப விசாரணைகள், இருந்து இந்த இறப்புகளில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.


இந்திக குணதிலக என்று அடையாளம் காணப்பட்டுள்ள இந்த இலங்கையர் தமது குழந்தைகளுடன் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடற்கரைக்கு சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.