வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் ஒரு லட்சம் பணிகள் வேலைத்திட்டம் ஆரம்பம்!!

1619

ஒரு லட்சம் பணிகள்..

2022ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் அமுல்படுத்தப்பட்ட ஒரு லட்சம் பணிகள் திட்டத்தில் ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டத்திட்டத்திற்கேன 3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது.

அதன் முதற்கட்ட வேலைத்திட்டம் வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட குகன் நகர் சனசமுக நிலைய கட்டிடத்தில் இன்று (03.02.2022) காலை 8.52 மணியளவில் இடம்பெற்றது.

மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு இனிதே ஆரம்பமாகியிருந்ததுடன் வேலைத்திட்ட பாதாகை திரைநீக்கம் , விருந்தினர்கள் உரையுடன் பயனாளிகளுக்கான அனுமதி கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நெளுக்குளம் கிராம சேவையாளர் சாந்தரூபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் பிரதிநிதியாக சாந்தகுமார், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர் சுப்பிரமணியம்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர், சனசமூக அபிவிருத்தி சங்கத்தினர், கிராம மக்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.