வவுனியாவில் குத்துச் சண்டை போட்டிக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி வைப்பு!!

1386

நிதியுதவி..

குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும்.

ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால் விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழுந்திருக்காவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். அல்லது போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியிட முடியா நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற சண்டையாளர் வெற்றி பெறுவார்.

இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு அதற்கு பின்னரும் நிலைத்து நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார்.

பயிற்சியாளர் செல்வரத்தினம் நந்தகுமார் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் டுபாய் நாட்டில் எதிர்வரும் 25.02.2022ம் திகதி இடம்பெறவுள்ள குத்துச்சண்டை போட்டிக்கு செல்லவுள்ள மூன்று வீரர்களுக்காக நிதியுதவி இன்று (03.02.2022) காலை 11.00 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தாய், தந்தையை இழந்து உறவினர் வீட்டில் வசிக்கும் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சிறிகாந்தன் சிறிதர்சன் என்பவருக்கு ஒரு லட்சத்தி இருபத்தையாயிரம் ரூபாவும்,

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை உதயகுமார் ரினுசா என்பவருக்கு ஒருலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாவும், வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் குமார் கிருஷாந்தன் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபா என மொத்தமாக மூன்றுலட்சத்தி எழுபதாயிரம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டன.

தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின் ஒழுங்கமைப்பில் லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2,75,000 ரூபா, எட்மன் 30000 ரூபா, கண்ணன் 25000 ரூபா,

டிலன்சன் 40000 ரூபா , நிஷாந்தன் 5000 ரூபா ஆகியவர்கள் நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்ததுடன் இவர்களுக்காக பணத்தினை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார் பயனாளிகளிடம் கையளித்தார்.