சவூதியில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இலங்கைப் பெண் வைத்தியசாலையில்!!

341

Saudiசவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து வந்த இலங்கைப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சவூதியில் இலங்கைப் பெண் தொழில் புரிந்து வந்த வீட்டு எஜமானின் இரண்டு பெண் பிள்ளைகள், இலங்கை பெண்ணின் கால்களை பிடித்து கொள்ள, வீட்டு எஜமான் பெண்ணின் பெண் உறுப்பில் ஊசி பின்களை சொருகியதாக கூறப்படும் சம்பவம் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சம்பவம் தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டமை அடுத்து, இலங்கைப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சத்திர சிகிச்சை மூலம் அவரது உடலில் இருந்து மூன்று சட்டைப் பின்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து இலங்கைப் பெண் பணிபுரிந்த வீட்டு எஜமான மற்றும் அவரது இரண்டு பெண் பிள்ளைகளிடம் சவூதி பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக அங்குள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.