லண்டனில் உயிருக்கு போராடும் இலங்கை தமிழ் சிறுமி!!

1752

தமிழ் சிறுமி..

லண்டனில் புற்றுநோயுடன் போராடும், இலங்கை பூர்வீகம் கொண்ட சிறுமியின் பெற்றோருக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் பிரபல கால்பந்து வீரர் ஆஷ்லே கெய்ன் அளித்து வருகிறார்.

கால்பந்து நட்சத்திரமாக ஆஷ்லே மற்றும் காதலி சபியா வோராஜீ ஆகியோர் தங்கள் பெண் குழந்தை உயிரிழந்ததிலிருந்து பல நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்த தம்பதியின் அன்பான குழந்தை அசேலியா கடந்த ஏப்ரல் மாதம் இரத்த புற்றுநோயான லுகேமியாவுக்கு எதிராக போராடி உயிரிழந்தார்.

லண்டனின் கிரேட் ஆர்மண்ட் தெரு மருத்துவமனையில் இதே நோயை எதிர்த்து எட்டு மாதங்களாக போராடி வரும் ஐந்து வயது ஈஷா நடேஸ்வரனின் குடும்பத்துடன் இந்த கால்பந்து வீரர் ஒரு சிறந்த நட்பை ஏற்படுத்தியுள்ளார்.

லண்டனில் வாழும் ரிஷ்யா நடேஸ்வரன் கவிதா தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் இரண்டாவது மகளான ஈஷா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஆசிய நாட்டவரின் தண்டு செல் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளவுள்ள இந்த சிறுமிக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு பிரித்தானியாவின் பிரபல கால்பந்து வீரர் முன்வந்துள்ளார்.

“ஈஷா தான் எங்கள் ஹுரோ. அவரது போராட்டம் நம்ப முடியாத ஒன்றும். இந்த பயணம், முடிவில்லாத மரதன் ஓட்ட போட்டி போன்றது.

அது எப்போது முடிவடையும் என்று எங்களுக்குத் தெரியாது, அதனால் நம்மை நாமே கூட வேகப்படுத்தவும் முடியாது” என ஈஷாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

“நீங்கள் எவ்வளவு காயப்பட்டாலும் உங்கள் குழந்தைக்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்று காட்டிக்கொள்ள வேண்டும். அதனையே அவர்கள் விரும்புகின்றார்கள்” என ஆஷ்லே கெய்ன் தெரிவித்துள்ளார்.

அதிகம் யோசிக்க வேண்டாம் ஈஷாவை ஆதரிக்க நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன் என ஈஷாவின் பெற்றோரிடம் கால்பந்து வீரர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையின் மருத்துவ தேவைக்காக தொடர்ந்து உதவி செய்து வரும் கால்பந்து வீரர், 100,000 பேர் நன்கொடை செய்ய பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான நடவடிக்கைகளையும் இந்த கால்பந்து வீரர் செய்து வருகின்றார். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும், புற்று நோயுடனான போராட்டத்தில் ஈஷா மீண்டு வருவார் என நம்பிக்கையில் இருப்பதாக கால்பந்து வீரர் ஆஷ்லே கெய்ன் தெரிவித்துள்ளார்.