அவதானமாக இருக்கவும் : பொது மக்களிடம் சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள கோரிக்கை!!

1317

கோவிட் தொற்று..

இலங்கையில் மீண்டும் ஒரு கோவிட் தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கோவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றி கோவிட் தொற்று அலை ஏற்படாது பாதுகாத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் தற்போது கோவிட் தொற்று நிலைமையானது அதிகரித்து வரும் நிலையில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கோவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான ஆதாரம் இல்லாமல் பொது இடங்களுக்குள் நுழைய மக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.