எரிவாயு அடுப்பு வெடிப்பு..

வவுனியா கூமாங்குளம் இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கூமாங்குளம் இரண்டாம் குறுக்குத் தெரு உள்ள வீடு ஒன்றில் ராமசாமி நந்தகோபால் என்பவர் தனது சமையலறையில் காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது இன்று (06.02) காலை திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் பயன்படுத்தப்பட்டது. உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை

இதனையடுத்து வீட்டார் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





