வவுனியாப் பல்கலைக்கழம்..

வவுனியா பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெயர்ப்பலகை ஐனாதிபதியின் வருகையின் முன்னரே இலங்கை வங்கியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகமானது கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கையின் 17 ஆவது பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட்டிருந்ததுடன் இதன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அங்குராப்பணம் செய்து வைப்பதற்காக இன்று ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் வவுனியா பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தலைமையில் நேற்றுமுன்தினம் (09.02.2022) இலங்கை வங்கியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பெயர்ப்பலகை திறப்பு விழா தொடர்பான புகைப்படங்கள் இலங்கை வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





