வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் மனிதாபிமான செயல்பாடு!!

3248

மனிதாபிமான செயல்பாடு..

வவுனியா பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராப்பண நிகழ்வுக்கு ஜனாதிபதி கோட்பாய ராஜபக்ஸ இன்று (11.02.2022) காலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பம்பைமடு இராணுவ சாவடிக்கு அருகாமையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் சம்பவ இடத்தில் வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் கலகமகே ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணோருவர் மயங்கி வீழ்ந்தமையினையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியின் கட்டளைக்கினங்க பாதுகாப்பு கடமையில் நின்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மயங்கி வீழ்ந்த பெண்ணிற்கு தண்ணீர் வழங்கியதுடன்,

அவரினை கைகளினால் பிடித்து முகத்தில் தண்ணீர் ஊற்றி கழுவியும் விட்டார். அத்துடன் சக மற்றுமொரு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அட்டை ஒன்றை எடுத்து அவருக்கு காற்றும் வீசிவிட்டுக் கொண்டிருந்தார்.

வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி உடனடியாக அவசர நோயாளர் சேவை பிரிவுக்கு தகவல் வழங்கி அன்புலன்ஸ் வண்டியினை வரவழைத்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தனது வாகனத்தில் இருந்த தண்ணீர் போத்தல்களையும் வழங்கினார்.

மேலும் போராட்டம் நிறைவுற்றதும் அவர்களுக்கு கொரோனா தொற்று நீக்கி மருந்தும் வழங்கினர். வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழ் செயற்படும் பொலிஸாரின் இவ் மனிதாபிமான செயற்பாடுகள் அங்கிருந்தவர்களின் மனதை நெகிழ செய்யும் வகையில் அமைந்திருந்ததது.