நாட்டில் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் கொரோனா மரணங்கள்!!

1133

கொரோனா..

நாட்டில் நேற்றைய தினம் 31 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,754 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, நாட்டில் கோவிட் தொற்று உறுதியான மேலும் 1,259 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 625,804 ஆக அதிகரித்துள்ளது.