வவுனியாவில் அதிகாலையில் வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்பு : பொலிஸார் விசாரணை!!

2774

எரிவாயு அடுப்பு..

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அதிகாலையில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக வீதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு சமையலறையில் உணவு தயாரித்து முடிந்த பின் வீட்டார் உறங்கியுள்ளனர். இன்று (13.02) அதிகாலை 1 மணியளவில் திடீரென எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரே இவ்வாறு வெடித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டாரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.