வவுனியா மரக்காரம்பளை வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து இளைஞன் மரணம்

8660

வவுனியா மரக்காரம்பளை வீதியில்

வவுனியா மரக்காரம்பளை வீதியில் இன்று (15.02.2022) காலை 8.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் மோட்டார் சைக்கில் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கணேசபுரம் பகுதியிலிருந்து மரக்காரம்பளை வீதியூடாக பெண்ணொருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிலை வீதியில் மற்றைய பக்கத்திலுள்ள ஒழுங்கையொன்றுக்கு திருப்ப முற்பட்டுள்ளார். இதன் போது எதிர்த்திசையில் வந்த பல்சர் ரக மோட்டார் சைக்கில் பெண் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டதுடன் வேகக்கட்டுப்பாட்டையிழந்து மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடனும் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பல்சர் ரக மோட்டார் சைக்கிலின் சாரதியான அம்மன் கோவில் வீதி , பண்டாரிக்குளம் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய சிறிரஞ்சன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இரு மோட்டார் சைக்கிலின் சாரதிகள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.