வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் கொரோனா தொற்றால் மரணம்!!

2014

க.பரந்தாமன்..

வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளருமான க.பரந்தாமன் கோவிட் – 19 தொற்றால் இன்று (16.02.2022) காலை காலமானார்.

சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதிக்கிரியைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று (16.02.2022) பிற்பகல் பொறளை இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளது.