வவுனியாவில் மணிகண்டன் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் பிராந்திய காரியாலயம் திறந்து வைப்பு!!

1644

நெளுக்குளம் பகுதியில்…

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குப்பட்ட நெளுக்குளம் பகுதியில் மணிகண்டன் போக்குவரத்து சங்கத்தின் பிராந்திய காரியாலயம் இன்று (16.02.2022) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

மாவட்டத்தில் தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சாரதிகளின் நலனை கருத்தில் கொண்டு மணிகண்டன் போக்குவரத்து சங்கம் இயங்கப்படவுள்ளதுடன்,

இனிவருகின்ற காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கு சங்கம் சார்பில் நடவடிக்கைகள முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தினை முன்னெற்றுவதற்குறிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளவதற்காக இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சங்கத்தின் பிராந்திய காரியாலயத்தினை நடா வெட்டி திறந்து வைத்ததுடன் நிகழ்வுகள் இனிதே இடம்பெற்றிருந்தன.

நிகழ்வில் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து சங்கத்தின் உரிமையாளர் சு.இராஜேஸ்வரன் , வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா,

நெளுக்குளம் கிராம சேவையாளர் சாந்தரூபன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட பாரவூர்தி சங்கத்தினர், பொதுமக்கள் , பேரூந்து சாரதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.