இத்தாலியில் இலங்கை பெண்ணை கொலை செய்த ஆவி : மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

1576

இத்தாலியில்..

இத்தாலியில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரின் மகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மிலான் நகரத்தில் உள்ள தனது வீட்டில் இலங்கை பெண்ணை கொலை செய்ததாக கூறும் 25 வயதுடைய மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது உடலுக்குள் புகுந்துள்ள உறவினர் ஒருவரின் ஆவியே தனது தாயை கொலை செய்ததாக சந்தேக நபர் அருகில் உள்ளவர்களிடம் சத்தமாக கூச்சலிட்டு கூறியுள்ளார்.

சந்தேக நபரான மகன் இலங்கையின் நாத்தன்டிய பிரதேசத்தில் உள்ள தேவாலயத்துடன் தொடர்புபட்டு செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் சந்தேக நபர் தனது உடலில் பேய் பீடித்துள்ளதாக கூறி வீட்டில் விளக்கை ஏற்றி வைத்து பேய்க்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாத்தாண்டிய முதுகடுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதான தமயந்தி ரத்நாயக்க வயது 54 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மிலான் நகர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.