உடலுக்கு வெளியே குடலுடன் பிறந்த அதிசயக் குழந்தை!!

317

உடலுக்கு வெளியே குடலுடன் பிறந்த குழந்தை மூன்று மாத ஓய்விற்கு பின்பு வீடு திரும்பியுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த விட்னஸ் நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குடல் வெளியே உள்ள நிலையில் ஜோஷ்வா என்ற குழந்தை ஒன்று பிறந்தது.

இதனால் அக்குழந்தையை, தீவிர அறுவை சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டப் பின் ஜோஷ்வாவிற்கு குடல் உள் வைக்கப்பட்டு இயல்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்குழந்தையின் தாய் கூறுகையில், என் குழந்தை ஏதோ குறைபாடுடன் பிறக்கப்போகிறது என்று 12 வாரங்களுக்கு முன்னரே தெரிந்தும் இருந்தும் நரகத்தில் இருக்கும் படி உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இப்போது என் குழந்தை நல்ல முறையில் வீடு திரும்பி உள்ளது சந்தோசத்தை அளிப்பதாகவும், அவன் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவேன் என்று கூறியுள்ளார்.

B1 B2 B3