பாரதி முன்பள்ளி..
பாரதி முன்பள்ளியின் பாரதி கலை விழா முன்பள்ளியின் அதிபர் ஜெயராஜா சந்திரா அவர்களின் தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர் சுப்பிரமணியம் உதயகுமார் அவர்களின் நிகழ்ச்சி தொகுப்பின் கீழ் கலைவிழா ஆரம்பமானதுடன் மங்கவிளக்கேற்றல், வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி குணரட்ணம் கமலகுமார் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் சிவாணி சண்முகதாஸ்,
வவுனியா இறம்பைக்களம் மகளீர் மகா வித்தியாலய அதிபர் அருட்சகோதரி மரியா டெஸ்ஷி செபமாலை, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் குமாரசிங்கம் முல்லைக்குமார் மற்றும் கௌரவ விருந்தினர்களாக வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் கந்தையா விஜயகுமார்,
வவுனியா தெற்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் ஆகியோரும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.