மன்னாரில் வெடி பொருட்களுடன் மூவர் கைது!!

300

A4மன்னார் கடற்பரப்பில் வெடி பொருட்கள் வைத்திருந்த மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸாரினால் சந்தேகத்தின்பேரில் மூவரை சோதனையிட்டபோது வெடி பொருட்கள் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்படும்போது சந்தேகநபர்களிடம் 36 டைனமைட் பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மன்னாரில் வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 5000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 2500 சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.