வவுனியாவில் இரு சிறுமிகள் மீது பாலியல் வல்லுறவு : ஒருவர் கைது!

335

Abuseவவுனியா காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த சிறுமிகள் இருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேகத்தில் ஒருவர் வவுனியா பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தார் சின்னகுளத்தில் இருந்து இரு சிறுமிகள் கடந்த 6 ஆம் திகதி தமது காதலர்கள் என தெரிவிக்கப்படும் இரு இளைஞர்களுடன் சென்றிருந்த போதே அவர்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

செக்கட்டிப்புலவு கிராமத்தில் இரு சிறுமிகளையும் அவர்களின் காதலர்களான இரு இளைஞர்கள் தனிமையில் வைத்திருந்ததாகவும் அந் நிலையில் இச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் பொலிஸாரால் ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றையவரை பொலிஸார் தேடிவருவதாகவும் தெரிவித்தனர்.

-நன்றி Tamizl-